தமிழ்
Sorah At-Tin ( The Fig )

Verses Number 8

وَالتِّينِ وَالزَّيْتُونِSorah At-Tin ( The Fig ) Verse Number 1
அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
وَطُورِ سِينِينَSorah At-Tin ( The Fig ) Verse Number 2
'ஸினாய்' மலையின் மீதும் சத்தியமாக-
وَهَذَا الْبَلَدِ الأَمِينِSorah At-Tin ( The Fig ) Verse Number 3
மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
لَقَدْ خَلَقْنَا الإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍSorah At-Tin ( The Fig ) Verse Number 4
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَSorah At-Tin ( The Fig ) Verse Number 5
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
إِلاَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍSorah At-Tin ( The Fig ) Verse Number 6
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு.
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِSorah At-Tin ( The Fig ) Verse Number 7
எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَSorah At-Tin ( The Fig ) Verse Number 8
அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?