தமிழ்
Sorah Ad-Dhuha ( The Forenoon )

Verses Number 11

وَالضُّحَىSorah Ad-Dhuha ( The Forenoon ) Verse Number 1
முற்பகல் மீது சத்தியமாக
وَاللَّيْلِ إِذَا سَجَىSorah Ad-Dhuha ( The Forenoon ) Verse Number 2
ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىSorah Ad-Dhuha ( The Forenoon ) Verse Number 3
உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
وَلَلآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الأُولَىSorah Ad-Dhuha ( The Forenoon ) Verse Number 4
மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىSorah Ad-Dhuha ( The Forenoon ) Verse Number 5
இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىSorah Ad-Dhuha ( The Forenoon ) Verse Number 6
(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىSorah Ad-Dhuha ( The Forenoon ) Verse Number 7
இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
وَوَجَدَكَ عَائِلا فَأَغْنَىSorah Ad-Dhuha ( The Forenoon ) Verse Number 8
மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
فَأَمَّا الْيَتِيمَ فَلا تَقْهَرْSorah Ad-Dhuha ( The Forenoon ) Verse Number 9
எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
وَأَمَّا السَّائِلَ فَلا تَنْهَرْSorah Ad-Dhuha ( The Forenoon ) Verse Number 10
யாசிப்போரை விரட்டாதீர்.
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْSorah Ad-Dhuha ( The Forenoon ) Verse Number 11
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.