தமிழ்
Sorah Al-Layl ( The Night )

Verses Number 21

وَاللَّيْلِ إِذَا يَغْشَىSorah Al-Layl ( The Night ) Verse Number 1
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
وَالنَّهَارِ إِذَا تَجَلَّىSorah Al-Layl ( The Night ) Verse Number 2
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالأُنثَىSorah Al-Layl ( The Night ) Verse Number 3
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىSorah Al-Layl ( The Night ) Verse Number 4
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
فَأَمَّا مَن أَعْطَى وَاتَّقَىSorah Al-Layl ( The Night ) Verse Number 5
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
وَصَدَّقَ بِالْحُسْنَىSorah Al-Layl ( The Night ) Verse Number 6
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىSorah Al-Layl ( The Night ) Verse Number 7
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
وَأَمَّا مَن بَخِلَ وَاسْتَغْنَىSorah Al-Layl ( The Night ) Verse Number 8
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
وَكَذَّبَ بِالْحُسْنَىSorah Al-Layl ( The Night ) Verse Number 9
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىSorah Al-Layl ( The Night ) Verse Number 10
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىSorah Al-Layl ( The Night ) Verse Number 11
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىSorah Al-Layl ( The Night ) Verse Number 12
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالأُولَىSorah Al-Layl ( The Night ) Verse Number 13
அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىSorah Al-Layl ( The Night ) Verse Number 14
ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
لا يَصْلاهَا إِلاَّ الأَشْقَىSorah Al-Layl ( The Night ) Verse Number 15
மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
الَّذِي كَذَّبَ وَتَوَلَّىSorah Al-Layl ( The Night ) Verse Number 16
எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
وَسَيُجَنَّبُهَا الأَتْقَىSorah Al-Layl ( The Night ) Verse Number 17
ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىSorah Al-Layl ( The Night ) Verse Number 18
(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
وَمَا لِأَحَدٍ عِندَهُ مِن نِّعْمَةٍ تُجْزَىSorah Al-Layl ( The Night ) Verse Number 19
மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
إِلاَّ ابْتِغَاء وَجْهِ رَبِّهِ الأَعْلَىSorah Al-Layl ( The Night ) Verse Number 20
மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
وَلَسَوْفَ يَرْضَىSorah Al-Layl ( The Night ) Verse Number 21
வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.