தமிழ்
Sorah Al-Mursalat ( Those sent forth )

Verses Number 50

وَالْمُرْسَلاتِ عُرْفًاSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 1
தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக
فَالْعَاصِفَاتِ عَصْفًاSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 2
வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
وَالنَّاشِرَاتِ نَشْرًاSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 3
(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
فَالْفَارِقَاتِ فَرْقًاSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 4
(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
فَالْمُلْقِيَاتِ ذِكْرًاSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 5
(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
عُذْرًا أَوْ نُذْرًاSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 6
(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 7
நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
فَإِذَا النُّجُومُ طُمِسَتْSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 8
இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
وَإِذَا السَّمَاء فُرِجَتْSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 9
மேலும், வானம் பிளக்கப்படும் போது-
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 10
அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 11
மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 12
எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
لِيَوْمِ الْفَصْلِSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 13
தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 14
மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 15
(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
أَلَمْ نُهْلِكِ الأَوَّلِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 16
முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
ثُمَّ نُتْبِعُهُمُ الآخِرِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 17
பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 18
குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 19
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاء مَّهِينٍSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 20
அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 21
பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
إِلَى قَدَرٍ مَّعْلُومٍSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 22
ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 23
இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 24
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
أَلَمْ نَجْعَلِ الأَرْضَ كِفَاتًاSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 25
பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
أَحْيَاء وَأَمْوَاتًاSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 26
உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاء فُرَاتًاSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 27
அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 28
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
انطَلِقُوا إِلَى مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 29
"நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
انطَلِقُوا إِلَى ظِلٍّ ذِي ثَلاثِ شُعَبٍSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 30
மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.
لا ظَلِيلٍ وَلا يُغْنِي مِنَ اللَّهَبِSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 31
(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 32
நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 33
நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 34
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
هَذَا يَوْمُ لا يَنطِقُونَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 35
இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.
وَلا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 36
அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 37
பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
هَذَا يَوْمُ الْفَصْلِ جَمَعْنَاكُمْ وَالأَوَّلِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 38
இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 39
எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 40
பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلالٍ وَعُيُونٍSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 41
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 42
இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 43
"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).
إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 44
நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 45
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلا إِنَّكُم مُّجْرِمُونَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 46
(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 47
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لا يَرْكَعُونَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 48
'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 49
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَSorah Al-Mursalat ( Those sent forth ) Verse Number 50
எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?