தமிழ்
Sorah Ar-Rahman ( The Most Graciouse )

Verses Number 78

الرَّحْمَنُSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 1
அளவற்ற அருளாளன்,
عَلَّمَ الْقُرْآنَSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 2
இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
خَلَقَ الإِنسَانَSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 3
அவனே மனிதனைப் படைத்தான்.
عَلَّمَهُ الْبَيَانَSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 4
அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 5
சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 6
(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.
وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 7
மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
أَلاَّ تَطْغَوْا فِي الْمِيزَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 8
நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلا تُخْسِرُوا الْمِيزَانَSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 9
ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலைநிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.
وَالأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 10
இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الأَكْمَامِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 11
அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 12
தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 13
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
خَلَقَ الإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 14
சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.
وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 15
நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 16
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 17
இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 18
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 19
அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
بَيْنَهُمَا بَرْزَخٌ لّا يَبْغِيَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 20
(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது, அதை அவை மீறமாட்டா.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 21
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 22
அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 23
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
وَلَهُ الْجَوَارِ الْمُنشَآتُ فِي الْبَحْرِ كَالأَعْلامِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 24
அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 25
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 26
(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -
وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلاَلِ وَالإِكْرَامِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 27
மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 28
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
يَسْأَلُهُ مَن فِي السَّمَاوَاتِ وَالأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 29
வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும், (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 30
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 31
இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 32
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
يَا مَعْشَرَ الْجِنِّ وَالإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالأَرْضِ فَانفُذُوا لا تَنفُذُونَ إِلاَّ بِسُلْطَانٍSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 33
"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 34
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلا تَنتَصِرَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 35
(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜீவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 36
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 37
எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 38
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فَيَوْمَئِذٍ لّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلا جَانٌّSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 39
எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 40
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالأَقْدَامِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 41
குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 42
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
هَذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 43
அன்று அவர்களிடம்; "இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்" (என்று கூறப்படும்).
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 44
அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 45
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 46
தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 47
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
ذَوَاتَا أَفْنَانٍSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 48
அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 49
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 50
அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 51
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِيهِمَا مِن كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 52
அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 53
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
مُتَّكِئِينَ عَلَى فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 54
அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள், அவற்றின் உள் பாகங்கள் "இஸ்தப்ரக்" என்னும் பட்டினாலுள்ளவை, மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 55
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلا جَانٌّSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 56
அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 57
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 58
அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 59
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
هَلْ جَزَاءُ الإِحْسَانِ إِلاَّ الإِحْسَانُSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 60
நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 61
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
وَمِن دُونِهِمَا جَنَّتَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 62
மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 63
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
مُدْهَامَّتَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 64
அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 65
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 66
அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 67
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 68
அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 69
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 70
அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 71
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 72
ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 73
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلا جَانٌّSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 74
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 75
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
مُتَّكِئِينَ عَلَى رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 76
(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
فَبِأَيِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 77
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلالِ وَالإِكْرَامِSorah Ar-Rahman ( The Most Graciouse ) Verse Number 78
மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.