தமிழ்
Sorah Adh-Dhariyat ( The Wind that Scatter )

Verses Number 60

وَالذَّارِيَاتِ ذَرْوًاSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 1
(புழுதிகளை எழுப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக!
فَالْحَامِلاتِ وِقْرًاSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 2
(மழைச்)சுமையைச் சுமந்து செல்பவற்றின் மீதும்,
فَالْجَارِيَاتِ يُسْرًاSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 3
பின்னர் (கடலில்) இலேசாகச் செல்பவற்றின் மீதும்,
فَالْمُقَسِّمَاتِ أَمْرًاSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 4
(பூமியிலுள்ளோருக்கு விதியானவற்றை அல்லாஹ்வின்) கட்டளைப்படி பங்கிடுவோர் மீதும் சத்தியமாக
إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٌSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 5
நிச்சயமாக நீங்கள் வாக்களிக்கப் படுவதெல்லாம் உண்மையேயாகும்.
وَإِنَّ الدِّينَ لَوَاقِعٌSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 6
அன்றியும், (நன்மை, தீமைக்குரிய) கூலி வழங்குவதும் நிச்சயமாக நிகழ்வதேயாகும்.
وَالسَّمَاءِ ذَاتِ الْحُبُكِSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 7
அழகு நிரம்பிய வானத்தின் மீது சத்தியமாக!
إِنَّكُمْ لَفِي قَوْلٍ مُّخْتَلِفٍSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 8
நீங்கள் (குர்ஆனைப் பற்றி) முரண்பட்ட பேச்சிலேயே இருக்கின்றீர்கள்.
يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 9
அ(வ் வேதத்)திலிருந்து திருப்பப்பட்டவன் (இப்பொழுதும்) திருப்பப்படுகிறான்.
قُتِلَ الْخَرَّاصُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 10
பொய் சொல்பவர்கள் அழிந்தே போவார்கள்.
الَّذِينَ هُمْ فِي غَمْرَةٍ سَاهُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 11
வர்கள் எத்தகையோரென்றால் மடமையினால் மறதியில் இருக்கின்றனர்.
يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 12
(நன்மை, தீமைக்குக்) "கூலி கொடுக்கும் நாள் எப்போது வரும்?" என்று அவர்கள் கேட்கின்றனர்.
يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 13
நெருப்பிலே அவர்கள் சோதிக்கப்படும் நாளாகும் அது (என்று நபியே! நீர் கூறும்).
ذُوقُوا فِتْنَتَكُمْ هَذَا الَّذِي كُنتُم بِهِ تَسْتَعْجِلُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 14
"உங்களுடைய சோதனையைச் சுவைத்துப் பாருங்கள்," எதனை நீங்கள் அவசரப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, இதுதான்.
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَعُيُونٍSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 15
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
آخِذِينَ مَا آتَاهُمْ رَبُّهُمْ إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَلِكَ مُحْسِنِينَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 16
அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள்; நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.
كَانُوا قَلِيلاً مِّنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 17
அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள்.
وَبِالأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 18
அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.
وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 19
அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு.
وَفِي الأَرْضِ آيَاتٌ لِّلْمُوقِنِينَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 20
உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَفِي أَنفُسِكُمْ أَفَلا تُبْصِرُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 21
உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா?
وَفِي السَّمَاءِ رِزْقُكُمْ وَمَا تُوعَدُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 22
அன்றியும் வானத்தில் உங்கள் உணவும், (மற்றும்) நீங்கள் வாக்களிக்கப் பட்டவையும் இருக்கின்றன.
فَوَرَبِّ السَّمَاءِ وَالأَرْضِ إِنَّهُ لَحَقٌّ مِّثْلَ مَا أَنَّكُمْ تَنطِقُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 23
ஆகவே, வானங்கள், பூமி ஆகியவற்றின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசிக் கொண்டிருப்பது உங்கள் வார்த்தையாக இருப்பது போன்று இது பிரத்தியட்சமான உண்மையாகும்.
هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 24
இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?
إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلامًا قَالَ سَلامٌ قَوْمٌ مُّنكَرُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 25
அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; "உங்களுக்கு) "ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), "(உங்களுக்கு) "ஸலாம்" என்று கூறினார். "இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லா சமூகத்தாராக (இருக்கின்றார்களே" என்று எண்ணிக் கொண்டார்).
فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاءَ بِعِجْلٍ سَمِينٍSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 26
எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(ப் பொறித்துக்) கொண்டு வந்தார்.
فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلا تَأْكُلُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 27
அதை அவர்கள் முன் வைத்து, "நீங்கள் புசிக்க மாட்டீர்களா?" என்று கூறினார்.
فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلامٍ عَلِيمٍSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 28
(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்படடது, "(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.
فَأَقْبَلَتِ امْرَأَتُهُ فِي صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 29
பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு "நான் மலட்டுக் கிழவியாயிற்றே!" என்று கூறினார்.
قَالُوا كَذَلِكَ قَالَ رَبُّكِ إِنَّهُ هُوَ الْحَكِيمُ الْعَلِيمُSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 30
(அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) "இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்" என்று கூறினார்கள்.
قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 31
(பின்னர் இப்றாஹீம்;) "தூதர்களே! உங்களுடைய காரியம் என்ன?" என்று வினவினார்.
قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمٍ مُّجْرِمِينَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 32
"குற்றவாளிகளான ஒரு சமூகத்தினர் பால் நாங்கள் நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று அவர்கள் கூறினார்கள்.
لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّن طِينٍSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 33
"அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-
مُسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلْمُسْرِفِينَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 34
"வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை."
فَأَخْرَجْنَا مَن كَانَ فِيهَا مِنَ الْمُؤْمِنِينَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 35
ஆகவே அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில்) நாம் வெளியேற்றி விட்டோம்.
فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِينَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 36
எனவே, அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் தவிர, ஒருவரையும் நாம் காணவில்லை.
وَتَرَكْنَا فِيهَا آيَةً لِّلَّذِينَ يَخَافُونَ الْعَذَابَ الأَلِيمَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 37
நோவினை தரும் வேதனையை அஞசுகிறார்களே அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சிளை விட்டு வைத்தோம்.
وَفِي مُوسَى إِذْ أَرْسَلْنَاهُ إِلَى فِرْعَوْنَ بِسُلْطَانٍ مُّبِينٍSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 38
மலும், மூஸாவி(ன் வரலாற்றி)லும் ஓர் அத்தாட்சி இருக்கிறது நாம் அவரைத் தெளிவான ஆதாரத்துடன் ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிய போது
فَتَوَلَّى بِرُكْنِهِ وَقَالَ سَاحِرٌ أَوْ مَجْنُونٌSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 39
அவன் தன் (ஆட்சி, செல்வம், படைகள் ஆகியவற்றின்) வல்லமையின் காரணமாக (அவரைப்) புறக்கணித்து; "இவர் ஒரு சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர்" என்று கூறினான்.
فَأَخَذْنَاهُ وَجُنُودَهُ فَنَبَذْنَاهُمْ فِي الْيَمِّ وَهُوَ مُلِيمٌSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 40
ஆகவே, நாம் அவனையும், அவனுடைய படைகளையும் பிடித்து அவர்களைக் கடலில் எறிந்தோம்; அவன் நிந்தனைக்கும் ஆளாகி விட்டான்.
وَفِي عَادٍ إِذْ أَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيحَ الْعَقِيمَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 41
இன்னும், 'ஆது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); நாம் அவர்கள் மீது (நாசம் விளைவிக்கக் கூடிய) மலட்டுக் காற்றை அனுப்பியN போது
مَا تَذَرُ مِن شَيْءٍ أَتَتْ عَلَيْهِ إِلاَّ جَعَلَتْهُ كَالرَّمِيمِSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 42
(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.
وَفِي ثَمُودَ إِذْ قِيلَ لَهُمْ تَمَتَّعُوا حَتَّى حِينٍSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 43
மேலும் 'ஸமூது' (சமூகத்தாரிலும் ஒரு படிப்பினை இருக்கிறது); "ஒரு காலம் சுகம் அனுபவியுங்கள்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டபோது
فَعَتَوْا عَنْ أَمْرِ رَبِّهِمْ فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَهُمْ يَنظُرُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 44
அவர்கள் தங்கள் இறைவனுடைய கடடளையை மீறினார்கள்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே (நில நடுக்கம் பேரிடி போன்ற) பயங்கரமான பெரும் சப்தம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.
فَمَا اسْتَطَاعُوا مِن قِيَامٍ وَمَا كَانُوا مُنتَصِرِينَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 45
ஆகவே, அவர்கள் நிற்கவும் சக்தி பெற்றார்களில்லை (எத்தகைய) உதவியும் பெற்றுக் கொள்ள முடியாதவர்களா(க மடிந்து) போயினர்.
وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ إِنَّهُمْ كَانُوا قَوْمًا فَاسِقِينَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 46
அன்றியும், இவர்களுக்கு முன்னால் நூஹுடைய சமூகத்தாரையும் (நினைவூட்டுவீராக); நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் சமூகத்தாராகவே இருந்தார்கள்.
وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 47
மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
وَالأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 48
இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 49
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.
فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 50
ஆகவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்து செல்லுங்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே இருக்கின்றேன் (என்று நபியே! நீர் கூறுவீராக).
وَلا تَجْعَلُوا مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ إِنِّي لَكُم مِّنْهُ نَذِيرٌ مُّبِينٌSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 51
மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).
كَذَلِكَ مَا أَتَى الَّذِينَ مِن قَبْلِهِم مِّن رَّسُولٍ إِلاَّ قَالُوا سَاحِرٌ أَوْ مَجْنُونٌSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 52
இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் (நம்) தூதர்களிலிருந்து ஒருவர் வரும் போதெல்லாம், அவர்கள் (அவரை) சூனியக்காரர், அல்லது பைத்தியக்காரர் என்று கூறாமல் இருந்ததில்லை.
أَتَوَاصَوْا بِهِ بَلْ هُمْ قَوْمٌ طَاغُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 53
இவ்வாறுதான் அவர்கள் தங்களுக்குள் (நம் தூதர்களைப் பழிக்க வேண்டுமென) ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து கொண்டனரா? அன்று, அவர்கள் அக்கிரமக்கார சமூகத்தாராகவே இருந்தனர்.
فَتَوَلَّ عَنْهُمْ فَمَا أَنتَ بِمَلُومٍSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 54
ஆகவே (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணித்து (விலகி) விடும்; (அப்படி நீர் விலகிவிடுவீராயின் அதற்காக) நீர் பழிக்கப்படமாட்டீர்.
وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 55
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالإِنسَ إِلاَّ لِيَعْبُدُونِSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 56
இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
مَا أُرِيدُ مِنْهُم مِّن رِّزْقٍ وَمَا أُرِيدُ أَن يُطْعِمُونِSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 57
அவர்களிடமிருந்து எந்த பொருளையும் நான் விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென்றும் நான் விரும்பவில்லை.
إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 58
நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.
فَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا ذَنُوبًا مِّثْلَ ذَنُوبِ أَصْحَابِهِمْ فَلا يَسْتَعْجِلُونِSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 59
எனவே, அநியாயம் செய்து கொண்டிருப்போருக்கு, அவர்களுடைய தோழர்களுக்கு வேதனையிலிருந்து ஒரு பங்கு இருந்தது போல், ஒரு பங்கு நிச்சயமாக உண்டு ஆகவே, (தண்டனைக்காக) அவர்கள் என்னை அவசரப்படுத்த வேண்டாம்.
فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا مِن يَوْمِهِمُ الَّذِي يُوعَدُونَSorah Adh-Dhariyat ( The Wind that Scatter ) Verse Number 60
ஆகவே, காஃபிர்களுக்கு அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், கேடுதான்.